HomePackage of 3 Books Authored by Dr. K. Vijaya Karthikeyan I.A.S
Package of 3 Books Authored by Dr. K. Vijaya Karthikeyan I.A.S
Package of 3 Books Authored by Dr. K. Vijaya Karthikeyan I.A.S
Standard shipping in 3 working days

Package of 3 Books Authored by Dr. K. Vijaya Karthikeyan I.A.S

 
₹299
Product Description

3 Books authored by Dr. K. Vijayakarthikeyan I.A.S

  1. Adhuvum Idhuvum (Tamil) Paperback
  2. Ettum Thoorathil IAS (Tamil)
  3. Orae kalil 13 Mangai

Summary of all Books

  1. ஒரே கல்லில் 13 மாங்காய்

விஜயா பதிப்பகம் வெளியிடும் நூலாசிரியர் திரு.க.விஜயகார்த்திகேயனின் இரண்டாவது நூல் இது. "ஒரே கல்லில் 13 மாங்காய்" என்ற தலைப்பிற்குள் ஆழமாகப் போனால் ஒரு சுரங்கம் போல் தோண்டி எடுக்கலாம். அவ்வளவு விஷயங்கள், பொருள் பொதிந்த கருத்துரைகள். வார்த்தைகளில் வாழ்க்கை இருக்கிறது என வாசகர்களுக்கு உரக்கச் சொல்லுகிறது இந்த நூல், எளிமையான நடையில் தினந்தோறும் நாம் கடந்து செல்லும் விஷயங்களை புதிய பரிமாணத்தில் கோடிட்டு காட்டியபடி... நடிகர் சிவக்குமார் அவர்களின் வாழ்த்துரை எல்லோரும் புத்தகம் எழுதிவிடலாம். ஆனால் இதுபோல் ஒரு புத்தகம் எழுதிவிட முடியுமா என்பது சந்தேகம்தான். ஒரு புத்தகத்தில் இவ்வளவு பயனுள்ள தகவல்களா! 'ஒரே கல்லில் 13 மாக்காய்' ஒரே மூச்சில் சுவைக்கத் தோன்றும் உயர்ந்த சிந்தனைக் கொத்து. மக்கள் மொழியில் மகத்தான அன்றாட நிகழ்வுகளை, அறிவியல் சிந்தனைகளை இப்புத்தகம் முழுவதும் பேசிவிட முன்மாதிரி இளைஞர், மருத்துவர், மக்கள் தொண்டாற்றும் அரசுப் பணியாளர் திரு. விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். அவர்களை வாழ்த்துகிறேன். வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று யாரும் சுலபமாகக் கேட்டுவிடலாம். ஆனால் வார்த்தைகளில்தான் வாழ்க்கை இருக்கிறது என்று சொல்லும் இந்த புத்தகத்தை வாசிப்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு நேசிப்பார்கள்.

  1. Ettum Thoorathil IAS (Tamil)

சாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய முடியும்? உங்கள் கையில் அரசின் அதிகாரம் இருந்தால்... எதையும் சாதிக்க முடியும். ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கவேண்டும், எளியோருக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். ஆம்! இந்திய ஆட்சிப் பணி என்ற ஐ.ஏ.எஸ். பணிதான் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை கொண்டது. ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து நிர்வாகத் திறமையால் நற்பணிகள் செய்யும் திறன்வாய்ந்தது ஐ.ஏ.எஸ். பணி. நம் நாட்டின் எதிர்காலத் தேவை நல்ல நிர்வாகிகள். நம் அரசின் செயல்பாடுகளை நிர்வகிக்கக்கூடிய திறன் உங்களிடத்திலும் இருக்கலாம். ஆனால், ‘ஐ.ஏ.எஸ்., தேர்வு கடினம். தேர்ச்சி பெறுவதே குதிரைக் கொம்பு’ என்றெல்லாம் பேசுபவர்களை புறந்தள்ளிவிட்டு இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். ‘தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்வது எப்படி? ஒவ்வொரு தேர்வையும் எப்படி எழுத வேண்டும்? எளிதாக எப்படி விடையளிக்கலாம்?’ போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் இந்த நூலாசிரியரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான விஜயகார்த்திகேயன். அற்புத டிப்ஸ்களையும் அள்ளி வழங்கி இருக்கிறார். தன்னுடைய தேர்வு அனுபவத்தையும் வாழ்க்கை அனுபவத்தையும் அற்புதமான நடையில் வடித்துத் தந்துள்ளார். இந்திய ஆட்சிப் பணிக்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளத் துணிந்தவர்களுக்கு, சாதிக்க துடிப்பவர்களுக்கு சத்துள்ள நம்பிக்கை டானிக் இந்த புத்தகம். படியுங்கள்... அதிகாரத்தை எட்டிப் பிடியுங்கள்.

  1. Adhuvum Idhuvum (Tamil) Paperback

Dr. K. Vijayakarthikeyan I.A.S shares from his experience the complimenting and opposing actions of emotions and characters that determine the success of a person. நம் வெற்றி சரியான போட்டியாளர்களிடமிருந்தே உருவாகிறது என்றால் நம்ப முடிகிறதா? நன்றாக யோசித்து பாருங்கள். அதில் ஒரு தெளிவு பிறக்கும். பலம் என்றால் பலவீனம் இருக்கும். இப்படியே விருப்பு-வெறுப்பு, பொறுமை-ஆத்திரம், நம்பிக்கை-மூடநம்பிக்கை என வரும் எதிர்மறை விளைவுகளுக்கெல்லாம் எளிமையாக தீர்வு சொல்லுகிறார் மருத்துவர் விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். அவர்கள்.

Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality
Create your own online store for free.
Sign Up Now